Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுகுழு உறுப்பினர்கள் பதவிக்கு 13 பேரிடம் நேர்கானல்

ஜனவரி 03, 2023 04:57

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் மோசமாக தோற்று வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்திய வீரர்களை தேர்வு செய்யும் 5 பேர் கொண்ட தேர்வு குழுவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அதிரடியாக கூண்டோடு கலைத்தது.

 முன்னாள் வேகப்பந்து வீரர் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவில் சுனில்ஜோஷி (தெற்கு மண்டலம்) ஹர்விந்தர் சிங் (மத்திய மண்டலம்) தேபாஷிஸ் மொகந்தி (கிழக்கு மண்டலம்) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். ஒருவர் விலகி இருந்தார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவை தான் கிரிக்கெட் வாரியம் நீக்கி புதிய தேர்வு குழுவை தேர்வு செய்ய முடிவு செய்தது.

புதிய தேர்வு குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு நியமிக்கப்பட்டது. அசோக் மல்கோத்ரா, ஜக்னி பரண்ஜோ, சுலக்சனா நாயக் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர். இந்தகுழு புதிய தேர்வு குழுவை தேர்வு செய்வதில் தாமதம் செய்தது. இதனால் பழைய தேர்வு குழுவை இலங்கை தொடருக்கான அணி வீரர்களை தேர்வு செய்தது. 

புதிய தேர்வு குழுவுக்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 13 பேரின் பெயர்களை இறுதி செய்து அவர்களிடம் கிரிக்கெட் ஆலோசனை குழு நேர்கானல் நடத்தியது. ஆலோசனை குழு இறுதி செய்த பட்டியலில் முன்னாள் வேகப்பந்து வீரர் வெங்கடேஷ் பிரசாத் இடம்பெறவில்லை. அமய் குருசியா, அஜய் ரத்ரா, எஸ்.எஸ்.தாஸ் சலீல் அங்கோலா, எஸ். சரத், கானர் வில்லியம்ஸ் முன்னாள் தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா, ஹர்விந்தர் உள்ளிட்டோ ரிடம் நேர்கானல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் தேர்வு குழு பதவிக்கு நியமிக்கப்படுகிறார்கள். 

இந்த நிலையில் சேட்டன் சர்மாவை மீண்டும் தேர்வு குழு தலைவராக தேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.குறுகிய காலத்துக்கு அவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்